Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி : வாடிக்கையாளரின் கணக்கில் மோசடி :

இதையடுத்து, கோவிந்தராஜ் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அடுத்த சில விநாடிகளில் கோவிந்தராஜின் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.1 லட்சத்து 8,740 எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதில், மோசடி கும்பல் டெல்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், டெல்லி ஜோரிபூரைச் சேர்ந்த அதுல்குமார், காசியாபாத்தைச் சேர்ந்த குணால் ஆகியோரைக் கைது செய்து, ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி, பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலியான கால்சென்டர்கள் நடத்தி, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, மோசடியில் ஈடுபடுகின்றனர். வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, பலரிடம் பணத்தைப் பறித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரைத் தேடி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x