Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

பேருந்து நிலையங்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை :

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட தேமுதிக ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அரவை எம்.முத்து தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளர் கஸ்தூரி என்.தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் பசுவை பாலசுப்பிரமணி, ஆனந்தன், மாவட்ட இளைஞரணி கலையரசன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் சுப்பிரமணியன், நாகராஜன், நகர நிர்வாகிகள் பழனிவேல், ரவிக்குமார், திருவை சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விஜயகாந்த் பிறந்த நாளை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று கரூர் மற்றும் குளித்தலை பேருந்து நிலையங்களைஇடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x