Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

திருத்துறைப்பூண்டியில் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கிராமத்தில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதைத் தடுக்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று(ஆக.2) முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்போவதாக கொருக்கை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக, மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி தலைமையில் நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் அலெக்சாண்டர் மற்றும் அதிகாரிகளுடன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம், ஊராட்சித் தலைவர் ஜானகிராமன் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஆட்சியரை அழைத்து வந்து கொருக்கை கிராமத்தை ஆய்வு செய்வது. அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x