Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

காரைக்காலில் 4 மாதங்களுக்குப் பிறகுமீண்டும் திறக்கப்பட்ட வாரச் சந்தை :

காரைக்கால்: காரைக்காலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையில், நகராட்சித் திடலில் வாரச் சந்தை நடைபெற்று வந்தது. கரோனா பரவல் சூழல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த வாரச் சந்தை மூடப்பட்டது.தற்போது, கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், காரைக்கால் நகராட்சி நிர்வாகம் உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாரச்சந்தையை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, 4 மாதங்களுக்குப் பிறகு வாரச்சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x