Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் இன்று (1-ம் தேதி) பொதுமக்களுக்கு கோவேக்சின் இரண்டாம் தவணையும், கோவிஷீல்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் இன்று (1-ம் தேதி) 138 மையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மொத்தம் 6 ஆயிரத்து 80 கோவேக்சின் மற்றும் 11 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் என மொத்தம் 17 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு சென்று 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி மற்றும் முதல் தவணை, இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT