Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

உசிலம்பட்டியில் தண்ணீர் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் :

மதுரை

வைகை அணையிலிருந்து 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக் கோரி இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் கட்சியினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாநிலச் செயலாளர் நேதாஜி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுரேந்திரன் பேசினார். இதில் வழக்கறிஞர் பிரிவு போஸ், தாமரை செல்வன், கணேசன் மற்றும் 58 கிராம பாசன கால்வாய் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஜான்சன், காட்டுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். இது தொடர்பாக நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x