Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

தடுப்பூசி செலுத்திக்கொண்ட வியாபாரிகள் குறித்து - சேத்துப்பட்டில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு :

சேத்துப்பட்டு பகுதியில் செயல்படும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் உள்ள கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஆய்வு செய்த போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்களின் கடைகளுக்கு ‘சீல்' வைக் கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, சேத்துப்பட்டு கடை வீதிகளில் வட்டாட்சியர் கோவிந்த ராஜன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கோமதி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். சேத்துப்பட்டில் உள்ள 4 முக்கிய சாலைகளிலும் செயல்படும் கடைகளுக்கு சென்று உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனரா? என கேட்டறிந்தனர்.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள் ளாதவர்களை எச்சரித்து, உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அதற்கான சான்றை காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோல், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்தப்பட்ட தற்கான சான்றை வைத்திருக்க வேண் டும் என அறிவுறுத்தினர்.

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் களின் கடைகள் மீது திங்கள்கிழமை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், கடைகளில் உள்ளவர்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x