Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி வரும் 15-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் :

திருவண்ணாமலை: பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தலித் விடுதலை இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கருப்பையா தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் மூக்நாயக், மாநில துணைத் தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை பொதுச்செயலாளர் சசிகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில், “பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கருப்புக் கொடியுடன் தொடர் உண்ணா விரதம் இருப்பது, திருப்பூரில் செப்டம்பர் 11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது, விருதுநகரில் செப்டம்பர் 24-ம் தேதி பூனா ஒப்பந்த நாளில் இரட்டை வாக்குவரிமையை வலியுறுத்தி கருத்தரங்கம் நடத்துவது” உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x