Published : 31 Jul 2021 03:12 AM
Last Updated : 31 Jul 2021 03:12 AM

தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு - புதிதாக 1,947 பேருக்கு கரோனா பாதிப்பு :

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக 1,947 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர் கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,109, பெண்கள் 838 என மொத்தம் 1,947 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 57,611ஆக அதிகரித்துள்ளது. இதுவரை25 லட்சத்து 2,627 பேர் குண மடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,193 பேர் குணமடைந்து வீடு களுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 20,934 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

27 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட27 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,050 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,318 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 28-ம் தேதிகரோனா பாதிப்பு 1,756 ஆக இருந்தது. 29-ம் தேதி 1,859 ஆக அதிகரித்தது. நேற்று 1,947 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x