Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM

கணவரை கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரண் :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவ்ஷாத்(35). இவரது மனைவி ரஸியா(29). இவர்களுக்கு பைரோஸ், பைசல் என 2 மகன்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான நவ்ஷாத் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.

இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஜாமாத்தில் 5-க்கும் மேற்பட்ட முறை இவர்கள் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எப்போதும் போல் நவ்ஷாத் குடித்துவிட்டு ரஸியாவிடம் தகராறு செய்துள்ளார். அருகில் கிடந்த கத்தியை எடுத்து வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரஸியா போதையில் இருந்து நவ்ஷாத்தை கீழே தள்ளிவிட்டு அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி கணவரை வெட்டிக் கொன்றார். பின்னர் ரஸியா சிவகாஞ்சி காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x