Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM
கடலூர் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் கல்பனா தலைமையிலான போலீஸார் கடந்த 11-ம் தேதி திட்டக்குடி அருகில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ஒரு வாகனத்தை சோதனையிட்டனர். இதில் 102 மூட்டைகளில் இருந்த 7,140 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா (25), பன்னீர்செல்வம் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் கடலூர் ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் குண்டர் சட்டத்தில் கருப்பையா, பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT