Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வருவாய், சாதிச் சான்றிதழ்களை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்து வருமான சான்றிதழ்,சாதி சான்றிதழ் கேட்டு பெறப்படும்மனுக்கள் மீது எவ்வித காலதாமதமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கவட்டாட்சியர்களும் கோட்டாட்சியர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவருவதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும். தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT