Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM
தமிழகத்தில் புதியதாக நேற்று 1,859 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று புதியதாக 1,859 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 1,053 பேர், பெண்கள் 806 பேர். அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT