Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

நூற்றாண்டு விழாவுக்கு ஆளுநருக்கு அழைப்பு - பேரவைத் தலைவர் அப்பாவு இன்று டெல்லி பயணம் : குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாஅழைப்பிதழை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளிப்பதற்காக பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று டெல்லி செல்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா, ஆகஸ்ட் 2-ம் தேதி நடக்கிறது. தலைமைச் செயலக பழைய கட்டிடத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில்நடக்கும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அத்துடன், சட்டப்பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடக்கும்இந்த விழாவில், முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு தலைமைகொறடா கோவி.செழியன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகைக்கு நேற்றுசென்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினர்.

பேரவைத் தலைவர்அப்பாவு உள்ளிட்ட மூவரும் இன்று டெல்லிபுறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழை அளித்து, முறைப்படி விழாவுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x