Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM
திருப்போரூர் - நெம்மேலி செல்லும் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உப்பளம் அமைப்பதற்காக வருவாய்த் துறை மூலம் 3,010 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை, 20 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளது. இதையடுத்து, இப்பகுதியில் உப்பளம் அமைக்கும் பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் கூறியதாவது: முதற்கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி செய்யலாம். சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT