Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

திட்டக்குடி அருகே 21 பவுன் திருட்டு :

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பட்டாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பச்சமுத்து - செல்வி தம்பதியினர். இவர்கள் நேற்று அதிகாலை காலை விளைநிலத்துக்குச் சென்று, விவசாயப் பணிகளை முடித்து விட்டு பிற்பகல் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.72 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து பச்சமுத்து அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x