Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM
மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கரோனா தொற்று அதிகமாக இருந்தபோது அரசு மருத்துவமனை கரோனா வார்டில் பணிபுரிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் டேட்டா ஆப்பரேட்டர்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், செவிலியர்கள், பண்முக மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோர் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரோனா கட்டுக்குள் வந்ததும் 2 மாத பணி நிறைவடைந்த நிலையில் இவர்கள் பணியில் இருந்து விடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று உச்சமாக இருந்தபோது நாங்கள் 24 மணி நேரமும் உயிரைப் பணயம் வைத்து பணி செய்தோம். கரோனா குறைந்ததும் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். ஆனால், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம், டிசம்பர் வரை ஒப்பந்த ஊழியர்களைப் பணியில் இருந்து விடுவிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். அதன்பேரில் எங்களை பணியில் தொடர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT