Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM
கோயில் நிலங்கள் குறித்த தகவல்கள் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் முன் வைக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் பி.மூர்த்தி, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் உள்ளிட்டசம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அங்குள்ள உதவியாளர்களில் பெரும்பாலானோர் அதிமுக பொறுப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள். அதிமுக அரசு கொள்முதல் செய்த நெல்லைத்தான் தற்போது அரைவை செய்து கடைகளுக்கு அரிசியாக அனுப்பப்படுகிறது. அரிசியின் தரம் சரியில்லை எனில் அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். வணிகவரித் துறையில் 626 பேர் போலியாக ஜிஎஸ்டி வாங்கி வைத்துள்ளனர். தவறு செய்தோர் உரிய தண்டனையைப் பெறுவர். கோயில் நிலங்கள் குறித்த தகவல்களை பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் முன் வைக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT