Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு பெஸோ அமைப்பு விழிப்புணர்வு :

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பாகப் பணிபுரிவது குறித்து பெஸோ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்புநிறுவனம் (பெஸோ) சார்பில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி சிவகாசி பெஸோ சார்பில் பட்டாசு ஆலை போர்மேன்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நேற்று நடைபெற்றது. 50 போர்மேன்கள் கலந்து கொண்டனர். பட்டாசு தயாரிப்பில் முழு பாதுகாப்பு மற்றும் விபத்தை குறைக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போர்மேன்கள் அனைவரும் பாதுகாப்பு குறித்த பேட்ஜ்களை அணிந்து பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பாதுகாப்பு அறிவுரைகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x