Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM
மத்திய அரசு மூலம் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்துக்கு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என பாஜ தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் தெரி வித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தை பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது:
கிறிஸ்தவர்கள், இஸ்லாமி யர்களுக்கு பாஜக எதிரானது என்ற பிம்பம் உள்ளது. அதை உடைக்க வேண்டும். இடைக்காட்டூர் தேவாலயத்தை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிறிஸ்தவர்களுக்கும் சாதக மானதுதான் பாஜக அரசு. மத்திய அரசு கிறிஸ்தவர்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT