Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM

காமராசர் பல்கலை.யில் சிறப்புக்குழு விசாரணை :

மதுரை காமராசர், பெரியார் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் நடந்த பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடந்தாலும், இந்த 3 பல்கலைக்கழகங்களிலும் சிறப்புக் குழுக்கள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், அரசு துணை செயலர் கார்த்திகா, இணை செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகி யோரை அரசு நியமித்தது. இக்குழு நேற்று மதுரை காம ராசர் பல்கலைக்கழகத்துக்கு வந்து 40 பேராசிரியர்கள் பதவி உயர்வு சர்ச்சை உள்ளிட்ட சில முறைகேடுகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையின்போது சில ஆவ ணங்களையும் ஆய்வு செய்தனர்.

இக்குழுவினருக்கு தேவை யான ஒத்துழைப்பை பல்கலை. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், 3 மாதத்துக்குள் விசா ரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x