Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM

கிராமப்புற ரயில் பயணிகளுக்காக - மெமு ரயில்களை இயக்க வேண்டும் : ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

அரக்கோணம்

கிராமப்புற ரயில் பயணிகளுக்காக சாதாரண பயணிகள் மின்சார ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் முக்கிய நகரங்களுக்கு இடையில் இயக் கப்பட்டு வந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இது கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு சிறு தொழில்களுக்காக செல்வோரை கடுமை யாக பாதித்துள்ளது. கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக தற்போது 50 சேவைகள் மட்டும் அளிக் கப்பட்டு வருகிறது. சாதாரண பயணிகள் மின்சார ரயில் (மெமு) சேவை இதுவரை தொடங் கப்படாமல் உள்ளது.

ஜோலார்பேட்டை-காட்பாடி, அரக்கோணம்-சேலம், சென்னை-திருப்பதி, சென்னை-நெல்லூர், வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த ரகுநாதன் கூறும்போது, ‘‘கிராமப்புற ஏழைகளுக்காக குறைந்த கட்டணத்தில் மெமு வகை ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் முக்கிய நகரங்களுக்கு ஏழை மக்கள் சுலபமாக சென்று வந்தனர். இந்நிலையில் முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவு ரயில்களில் கிராமப்புற மக்கள் செல்ல முடியாது.

பெங்களூரு மற்றும் ஹைதரா பாத்தில் மின்சார ரயில்களை முழு வீச்சில் இயக்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்று இயக்கி வருகின்றனர். தெற்கு ரயில்வே நிர்வாகமும் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இப்போதுதான் அதை செய்துள்ளனர். விரைவில் மெமு ரயில்களை இயக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x