Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM
வேலூர் மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்பாடி அடுத்த பொன்னை காந்தி ரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்பாக காவல் துறையினர் நேற்று முன்தினம் மாலை சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது, வெங்கடேசன் (46) என்பவரது மளிகை கடையில் பதுக்கி வைத் திருந்த ரூ.60,000 மதிப்பிலான பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், கடையின் உரிமையாளர் வெங்கடேசன் மற்றும் அவருடைய சகோதரர் துரைமுருகன் (41) ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT