Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

தமிழகத்தில் புதிதாக 1,756 பேருக்கு கரோனா : முதியவர்கள் உட்பட 29 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் புதிதாக 1,756 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,005, பெண்கள் 751 என மொத்தம் 1,756 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 53,805 ஆகஅதிகரித்துள்ளது. இதுவரை 24 லட்சத்து 98,289 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,394 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 21,521 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,315 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x