Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

ஓ.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின் - தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு : உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

போடி தொகுதி எம்எல்ஏவான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீ்ர்செல்வத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளரான மிலானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிபி.பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கில் சொத்துமதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில், அவரது வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் என்றும், தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x