Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவர் ஆவதற்கு, தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், கழக நவீன அரிசி அலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து, பொது விநியோக திட்டத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரவை செய்து, பொது விநியோக திட்டத்துக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட இம்மண்டலத்தில் உள்ள தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்வது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT