Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

கடலோர காவல்படை சார்பில் - இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி சுடருக்கு வரவேற்பு :

இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றியின் 50-ம் ஆண்டு பொன்விழா வெற்றி சுடருக்கு, கிழக்குப் பிராந்திய கடலோர காவல்படை அலுவலகம் சார்பில்வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்றபோரில், இந்தியா வெற்றி பெற்றது.இவ்வெற்றியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, நாட்டின் நான்கு மூலைகளுக்கு வெற்றிச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது.

கன்னியாகுமரி வழியாக தமிழகத்துக்கு வந்த இச்சுடர் கடந்த 20-ம் தேதியன்று சென்னை வந்தடைந்தது. இந்நிலையில், இந்த வெற்றிச் சுடருக்கு சென்னையில் உள்ள கிழக்குப் பிராந்திய கடலோர காவல்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி சுடரை கிழக்குப் பிராந்திய கடலோரகாவல்படை ஐஜி ஆனந்த் பிரகாஷ்பதோலா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்ற கடலோர காவல்படை வீரர்கள் 5 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x