Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

சுயதொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடனுதவி : சென்னை ஆட்சியர் அறிவிப்பு :

சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் மானியமாகும்.

தகுதியுடைய நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கரோனா பாதிப்பு காரணமாக, நேர்முகத் தேர்வின்றி தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநரை நேரடியாகவோ அல்லது 044-22501621 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x