Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

காரைக்கால் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் இன்று (ஜுலை 29) தொடங்கி நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் 18 முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படும். தகுதியுடையோருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் இம்முகாமில் போடப்படும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் முகாம் நடைபெறும். நடமாடும் வாகனம் மூலமும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும் என காரைக்கால் மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் நேற்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x