Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம் :

வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் உடனடியாக தொடங்க வேண்டும். அதே நேரத்தில் 5 ஜி சேவை தொடங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாதந்தோறும் மாதக்கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். மொபைல் கோபுரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பவர் பிளான்ட் முறையாக பராமரிக்க வேண்டும். பேட்டரிகளில் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இதில், ஏராளமான பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x