Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை : மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்

புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வரையறுக்கமேலும் 6 மாதம் அவகாசம் தேவைப்படுகிறது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ் தானில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினர், பவுத்தர்கள், பார்சி சமூகத்தினர், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.இதன்படி குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ)கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து 6 மாதங்களில் சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் இன்னமும் விதிகள் வகுக்கப்படவில்லை. இதுவரை 4 முறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சவுரவ் கோகோய் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், "சட்ட விதிகள் வரையறுப்பது தொடர்பான மக்களவை, மாநிலங்களவை குழுக்களிடம், சிஏஏ சட்ட விதிகளைவரையறுக்க மேலும் 6 மாதம் (2022 ஜனவரி 9 வரை) கால அவகாசம் கோரப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x