Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM
நாட்டில் 7 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பில் வனப்பகுதி நிலம் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று எழுத்து மூலம் அளித்த பதில்:
நாட்டில் 7,67,419 சதுர கிலோ மீட்டருக்கு வனப்பகுதி நிலம் அமைந்து உள்ளது. 2019-ம்ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தியமாநில வனப்பகுதி அறிக்கையில்இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4,34,853 சதுரகிலோ மீட்டர் தூரம் அடர்ந்தவனப்பகுதியாகவும், 2,18,924சதுர கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், 1,13,642 சதுர கிலோ மீட்டர் தூரம் வரையறுக்கப்படாத வனப்பகுதியாகவும் உள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT