Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
கும்பகோணத்தை அடுத்த துக்காச்சி ஊராட்சி ஏரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், நேற்று காலை அவரது வயல் அருகே உள்ள குட்டையில் பொக்லைன் மூலம் மண்ணை எடுத்து கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, குட்டையிலிருந்து 4 அடி உயரம் உள்ள பழங்கால பைரவர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர், அந்தசிலையை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று, வட்டாட்சியர் கண்ணனிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர். இந்த கற்சிலை தஞ்சாவூர் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்வுக்கு பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT