Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM

சட்டவிரோத மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை : ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளையராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, அரியாணிப்பட்டி, குளத்தூர், மின்னத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் குவாரி நடக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு குவாரிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், சட்டவிரோத குவாரி நடப்பதாகக் கூறப்படும் இடங்களில் புதுக்கோட்டை ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x