Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

ராணிப்பேட்டைக்கு புதிய எஸ்பி நியமனம் :

தேஷ்முக் சேகர் சஞ்சய்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 12 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை சைபர் குற்றப்பிரிவு 2-ன் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x