Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

தமிழக பக்தர்களின் காரை வழிமறித்து திருடிய கும்பலில் 2 பேர் கைது :

குப்பம்: திருப்பத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த சிலர் காரில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் புங்கனூர் அருகே உள்ள போயகொண்ட கங்கையம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தனர். குப்பம் அருகே உள்ள பங்காரு நத்தம் எனும் ஊரை கடக்கும் போது, போலீஸ் உடையில் இருந்த 3 பேர், இவர்களின் காரை தடுத்து நிறுத்தினர்.

அனைவரையும் கீழே இறங்கும்படி அந்த கும்பல் கூறி மிரட்டியது. இதையடுத்து, அனைவரும் கீழே இறங்கினர். அப்போது, அந்த கும்பலை சேர்ந்த ஒருவன், காரில் ஏறி வேகமாக காரை ஓட்டி சென்று விட்டார். மீதமிருந்த 2 பேரும் ஓட முயற்சித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கியவர்களும், பொதுமக்களும் அவர்களை விரட்டி பிடித்து குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x