Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் சார்பில், தலைமைப் பொதுமேலாளர் டாக்டர் வி.கே.சஞ்சீவி தலைமையில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு மற்றும் திறந்தவெளிக் கூட்டம் கடந்த 22-ம்தேதி நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக, தொலைபேசி வாயிலாக இக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், பல நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள லேண்ட்லைன், மொபைல், பிராட்பேண்ட் தொடர்பான தங்களது குறைகளைதொலைபேசி மூலமாகவும், குறுந்தகவல், வாட்ஸ்-அப் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மொத்தம் 431 புகார்கள் பெறப்பட்டன. இதில், 261 புகார்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள புகார்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று பிஎஸ்என்எல் சென்னைதொலைபேசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT