Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து, இந்திய ராணுவம் போரிட்டு வெற்றிபெற்றது.
ஜூலை 26-ம் தேதி கார்கில் பகுதியில் இந்திய கொடியை நிலைநாட்டியது. இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதிகார்கில் வெற்றி தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்போரில் 527 வீரர்கள், தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், சென்னையில் உள்ள ராணுவத்தின் தட்சிண பாரத பகுதி தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT