Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

சிட்லபாக்கம், பெருங்களத்தூரில் - துணை சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும் : தாம்பரம் எம்எல்ஏ ராஜா தகவல்

தாம்பரம் தொகுதியில் நடைபெறும்சுகாதாரப் பணிகள் குறித்து எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தாம்பரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள்,தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், அதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டது. மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பெருங்களத்தூர், சிட்லபாக்கம் பேரூராட்சியில் செயல்படும் துணைசுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தெரிவித்தார்.

மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு வரவேண்டும். நோயாளிகளை வெகுநேரம் காக்க வைக்கக் கூடாது. தடுப்பூசி விவரங்களை சரியாக தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியா ராஜ், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் பெருமாள், மருத்துவர்கள் பிரபாவதி, சரவண வள்ளி, விஜயகுமாரி, சிவரஞ்சனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x