Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றியத்தலைவர் மேனகா விஜயகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்ட அரங்கிற்கு வந்த அமமுக உறுப்பினர் கிரகோரி மற்றும் சுயேச்சை உறுப்பினர் சிவசுப்ரமணியன் ஆகியோர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடும் அறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரின் படம் வைக்கப்படவில்லை. இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுவோம்" என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தனது அறையில் இருந்த முதல்வரின் படத்தை எடுத்து வந்து, கூட்ட அரங்கில் மாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT