Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

மனைப்பட்டா கேட்டு மக்கள் மறியல் :

புதுச்சேரி

புதுவை எஸ்.வி. பட்டேல் சாலை அருகே அமைந்துள்ள திருவள்ளுவர் நகர், மதுரை வீரப்பன் கோயில் வீதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினர் மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பல தடவை மனுக்கள் அளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று எஸ்.வி. பட்டேல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x