Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM
வங்கதேசத்தைச் சேர்ந்த கரோனா நோயாளிகளுக்காக, பேனாபோல் என்ற இடத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக, தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயங்கும் சக்ரதர்பூர் பிரிவில் இதற்கான பணிகள் நடந்தன. பின்னர், ரயில் மூலம் வங்கதேசத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில், ‘‘அண்டைநாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின்படிவங்கதேசத்துக்கு ரயில் மூலம்200 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT