Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 535 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகத் தின் புள்ளிவிவரப்படி நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 39,742 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 46 சதவீதம் பேருடன் (18,531) கேரளா முதலிடத்தில் உள்ளது. இதுபோல 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா வால் 535 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4.2 லட்சமாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 765 குறைந்து, 4.08 லட்சமாக உள்ளது. இது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரில் 1.31 சதவீதம் ஆகும்.
இதுவரை 45.62 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன. ஒரு நாளில் 17.18 லட்சம் மாதிரிகள் பரிசோதிக் கப்பட்டன. நாடு முழுவதும் 43.31 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளில் மட்டும் 51.18 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது என்று சுகாதாரத் அமைச்சகம் கூறியுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT