Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM
கோவை: கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்துக்கு 2021 – 2025-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக ஜி.செல்வராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக சி.என்.அசோக், சி.ஆனந்த், டி.பழனிசாமி மற்றும் நவரத்ன குமார் பாப்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக எஸ்.பாலாஜி, இணை செயலாளர்களாக என்.ராமலிங்கம், ராமகிருஷ்ணன் மற்றும் திபாலா, பொருளாளராக எஸ்.பத்மநாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கோவையில் சர்வதேச தரத்தில் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT