Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது :

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாண்டியூர் கிராமத்தில் கடந்த ஜூனில் சாமித் துரை தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்டோர் மீது நயினார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்குமார் (22) என்பவரை குண்டர் சட்டத்தில் போலீஸார் நேற்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x