Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

ஒடிசா மாநில கைவினைப் பொருட்களை பதிவுசெய்ய வழக்கறிஞர் சஞ்சய்காந்தி நியமனம் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த பொன்னாப்பூரைச் சேர்ந்தவர் சஞ்சய்காந்தி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும், தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களைக் கண்டறிந்து, அவற்றை சட்டரீதியாக பாதுகாக்கும் பொருட்டு, புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்து வருகிறார். இதுவரை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, வீணை, சுவாமிமலை உலோக சிற்பங்கள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, திருபுவனம் பட்டு உள்ளிட்ட 25 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கைவினை மற்றும் குடிசைத் துறை, அம்மாநிலத்தில் உள்ள கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட தனிச்சிறப்புடைய பொருட்களை சட்டப்படி பதிவு செய்வதற்கான சிறப்பு அதிகாரியாக சஞ்சய்காந்தியை நியமித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x