Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM
திருச்சி: திருச்சியில் 62 பேர், தஞ்சாவூரில் 98 பேர், திருவாரூரில் 21 பேர், நாகையில் 35 பேர், கரூரில் 12 பேர், புதுக்கோட்டையில் 35 பேர், பெரம்பலூரில் 6 பேர், அரியலூரில் 15 பேர், மயிலாடுதுறையில் 20 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 304 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 98, கரூரில் 18, திருவாரூரில் 29, தஞ்சாவூரில் 131, நாகையில் 31, புதுக்கோட்டையில் 33, பெரம்பலூரில் 11, அரியலூரில் 35, மயிலாடுதுறையில் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுக்கோட்டை, அரியலூரில் தலா 2, தஞ்சாவூர், மயிலாடுதுறையில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT