Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

செப்டம்பர் மாதம் : சிறுவர்களுக்கான கரோனா தடுப்பூசி :

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:

குஜராத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித் துள்ள கரோனா தடுப்பு மருந்து, பாரத் பயோ டெக் நிறுவனம் சிறாருக்காக தயாரித் துள்ள கரோனா தடுப்பூசி (கோவேக்சின்) ஆகியவை சோதனையில் உள்ளன.

அதன்படி இந்தியாவில் சிறாருக்கான கரோனா தடுப்பூசி வரும் செப்டம்பரில் கிடைக்கும். அமெரிக்காவின் பைசர் நிறுவன கரோனா தடுப்பூசியையும் சிறாருக்கு செலுத்தலாம். மூன்று தடுப்பூசிகளுக்கும் அனுமதி கிடைத்த பிறகு சிறாருக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியும். அதன் பிறகு பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x