Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
கோவை: தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை (சி.எஸ்.ஆர்.) பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது,‘‘தனியார் மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க அனைத்து தொழில் நிறுவனங்களும், தங்களது சி.எஸ்.ஆர் நிதியை வழங்கவேண்டும். தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டால் தான் தொற்று பரவலைக் குறைக்க முடியும். தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டால், விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடையலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT