Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் மீன்வளத் துறைசெயலர் ஜவகர் நேற்று கூறியதாவது:
தமிழக மீனவர்கள் இந்திய கடல்எல்லையை தாண்டுவதை தடுப்பதற்காகவும், மீன்பிடி படகுகள் செல்வதைக் கண்காணிக்கவும், இஸ்ரோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டிரான்ஸ்பாண்டர் கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.
இதுதவிர, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவர்கள் கடல் எல்லை தாண்டுவதை தடுக்கவும், புயல், மழையில் சிக்கும் படகுகளைக் கண்டறிய உதவவும் 5,000 நவீன டிரான்ஸ்பாண்டர் கருவிகளைஇஸ்ரோவிடம் இருந்து ரூ.15 கோடிக்கு கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இக்கருவிகளை வரும்அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் மீனவர்கள் ஆபத்தின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT